மகள்களை கொன்று நிர்வாண பூஜை செய்த பெற்றோர்

 

மகள்களை கொன்று நிர்வாண பூஜை செய்த பெற்றோர்

பெற்ற மகள்களை நரபலி கொடுத்து நிர்வாண பூஜை செய்த பெற்றோரை ஜாமினில் விடுவித்துள்ளது நீதிமன்றம். இதனால் அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறது ஆந்திரா.

ஆந்திராவில் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் சிவநகரில் வசித்து வருபவர் புருஷோத்தம். இவரது மனைவி பத்மஜா. இவர்களுக்கு அலெக்கியா(வயது27), சாய் திவ்யா(வயது22) என்று இரு மகள்கள்.

மகள்களை கொன்று நிர்வாண பூஜை செய்த பெற்றோர்

மகள்களை நரபலி கொடுத்து நிர்வாண பூஜை செய்ய முடிவெடுத்த புருஷோத்தம் – பத்மஜா தம்பதி, கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி அன்று வீட்டில் பூஜைகள் செய்தனர். அப்போது இரு மகள்களையும் அடுத்தடுத்து ஜிம்மில் இருக்கும் தம்புள்ஸினால் அடித்து கொலை செய்தனர்.

அதன்பின்னர் இரு மகள்களிடன் ஆடைகளையும் அகற்றிவிட்டு, அவர்களை நிர்வாணமாக படுக்க வைத்து பூஜை செய்தனர்.

இதற்குள் அடித்துக்கொள்ளும்போது அந்த இளம்பெண்கள் போட்ட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சந்தேகத்தில் போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டனர்.

மகள்களை கொன்று நிர்வாண பூஜை செய்த பெற்றோர்

போலீசார் வந்து விசாரித்ததும், மகள்களை நரபலி கொடுத்திருக்கிறோம். நிர்வாண பூஜை செய்து வருகிறோம். ஒரு நாளில் அவர்கள் உயிர்த்தெழுந்துவிடுவார்கள் என்று சொல்லி இருக்கிறார்கள் புருஷோத்தம் – பத்மஜா தம்பதியினர்.

இதையடுத்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதால் அவர்களுக்கு சிகிச்சையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிகிச்சைக்கு பின்னர் கடந்த மார்ச் மாதத்தில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், உறவினர்கள் அவர்களை ஜாமீனில் வெளியே எடுத்துவிட்டனர்.