’’அடுத்த மாநிலத்திற்கு தர மாட்டோம் என்பது மட்டமான பேச்சு’’

 

’’அடுத்த மாநிலத்திற்கு தர மாட்டோம் என்பது மட்டமான பேச்சு’’

ஆக்சிஜன் பற்றாக்குறையினால் தமிழகத்திலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆக்சிஜன் அனுப்பியதாக வருத்தம் தெரிவித்திருந்தார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இதன் பின்னர், ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும். வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் சென்றால் தமிழகத்திற்கு கடும் பற்றாக்குறை ஏற்படும். தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார் முதல்வர் பழனிச்சாமி.

’’அடுத்த மாநிலத்திற்கு தர மாட்டோம் என்பது மட்டமான பேச்சு’’

தமிழகத்திற்கு 220 மெட்ரிக் டன் தேவை என மத்திய அரசு தவறான கணக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதன் தேவையும் அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழலை கருத்தில் கொண்டால் தமிழகத்திற்கு 450 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும். தமிழகத்தில் 400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்யும் திறன் இருக்கிறது என்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ‘’பாரதம் ஒருங்கினைந்த நாடு, பூகம்பமோ, புயலோ, வெள்ளச்சேதமோ எதுவாயினும் நாடே ஒன்றிணைந்து மீட்டுபணிகளில் ஈடுபடும், துயருற்ற மக்களுக்கு உதவி புரிவர். எங்கள் மாநிலத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை அடுத்த மாநிலத்திற்கு தர மாட்டோம் என்பது மட்டமான பேச்சு’’என்கிறார்.

’’அடுத்த மாநிலத்திற்கு தர மாட்டோம் என்பது மட்டமான பேச்சு’’

மேலும், ‘’நிர்வாக ரீதிக்காக தான் மாநிலங்கள் பிரிக்கப்படனவே தவிர பிரிவினையை வளர்க்க அல்ல. தேச விடுதலைக்காக அதிக மக்களை ஈடுபடுத்திய மாநிலம் தமிழகம். இங்கு இத்தகைய நச்சு பேச்சுக்கள் பிரிவினையை ஊக்குவிக்கும். அதிலும் அரசே இப்படி பேசுவது வருத்தமளிக்கிறது.

மக்கள் நலன் என்ற பெயரில் விஷ கருத்துக்களை விதைத்து கீழ்தரமாக அரசியல் செய்யும் கட்சிகளை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும். ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பவர்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்கக்கூடாது’’என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.