சென்னையில் ஒரே நாளில் 25 பேர் கொரோனாவால் பலி!
Jul 10, 2020, 09:07 IST1594352254000
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,231 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 73,728 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் ஒரே நாளில் 25 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். ராஜீவ் காந்தி -8, ஓமந்தூரார் -3, ஸ்டான்லி – 4, கே. எம். சி -3, தனியார் மருத்துவமனை 7 என மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.