ஈரோட்டில் 25 சாய, சலவை, தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மூடல்

 

ஈரோட்டில் 25 சாய, சலவை,  தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மூடல்

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட, காவிரி ஆற்றில் பிச்சைகாரன்பள்ளம் ஓடை, வைராபாளையம் குப்பை கிடங்கு, காடையாம்பட்டி சாய சலவை தொழிற்சாலையில் இன்று (21.09.2020) தேசிய பசுமை தீர்ப்பாய குழுவினருடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோட்டில் 25 சாய, சலவை,  தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மூடல்

இந்த ஆய்வுகளின் போது ஆட்சித்தலைவர்சி.கதிரவன் தெரிவித்துள்ளதாவது: ‘’ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்று நீர் மாசுபடுவது குறித்து தேசிய பசுமை
தீர்ப்பாயம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்தது. அதனடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் காவிரி ஆற்றில் நீர் மாசுபடுவதை தடுக்கும் விதமாகவும் நீரின்
தரத்தை உயர்த்தும் விதமாகவும் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்தின் தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர், பள்ளிபாளையம் நகராட்சி ஆணையர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய இணை சுற்றுச்சூழல் பொறியாளர் உள்ளிட்டவர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டது.

ஈரோட்டில் 25 சாய, சலவை,  தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மூடல்

இக்குழுவானது காவேரி மாசுபடுவதற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அவ்வாறு மாசு ஏற்பட காரணமான ஆலைகள் மீது நடவடிக்கை மற்றும் சுற்றுச்சூழல் இழப்பீடு வசூல் செய்யவும் உத்தரவிட்டது. மேலும் காவிரி ஆற்றின் நீரை தரம் உயர்த்த ஆலோசனை செய்து நடவடிக்கை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், ஈரோடு, பறக்கும் படை, ஈரோடு வட்டாட்சியர் மற்றும் மாநகராட்சி அலுவலர்களைக்
கொண்ட துணைக்குழு அமைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கிணங்க மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் 25 சாய, சலவை மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது.

ஈரோட்டில் 25 சாய, சலவை,  தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மூடல்

மேலும் சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.1.35 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. வைராபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் உள்ள மாநகராட்சி குப்பைகள் சுத்தம்
செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 7 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் குழுவின் தொடர் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை மூலம் நீரின் தரம் உயர்த்தப்படும். அதன் தொடர்ச்சியாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, இன்று ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட, காவிரி ஆற்றில் பிச்சைகாரன்பள்ளம் ஓடை இணையும் இடம், வைராபாளையம் குப்பை கிடங்கு மற்றும் பவானி ஆற்று பகுதியில் நீர் தரம் குறித்து சுற்றுச்சூழல் அலுவலர்கள் மூலம் நீர் மாதிரிகள் எடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், காடையாம்பட்டி சாய சலவை தொழிற்சாலையில், பூஜ்யநிலைக் கழிவுநீர் சுத்திகரிப்பு முறையில் கழிவுநீர் மற்றும் திடக்கழிவுகள் சுத்திகரிக்கும் முறை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது’’ என தெரிவித்தார்.

ஈரோட்டில் 25 சாய, சலவை,  தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மூடல்