25 கோடி இருந்தால் தான் காங்கிரஸில் சீட்.. ரகசியத்தைப் போட்டுடைத்த வேட்பாளர்..!

 

25 கோடி இருந்தால் தான் காங்கிரஸில் சீட்.. ரகசியத்தைப் போட்டுடைத்த வேட்பாளர்..!

காங்கிரஸ் சார்பாகத் தேர்தலில் போட்டியிட ரூ.25 கோடி ரூபாய் இருந்தால் தான் காங்கிரஸ் சார்பாக போட்டியிட முடியும் என்று கூறி உள்ளூர் பிரமுகர்கள் யாருக்கும் சீட் வழங்கப் படவில்லை

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் பின், காங்கிரஸ் நாங்குநேரியிலும் திமுக விக்கிரவாண்டியிலும் போட்டியிடப் போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். 

Nanguneri

இதனையடுத்து, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே இடைத்தேர்தலில் போட்டியிடப் போகும் தங்களது வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. ஆனால், காங்கிரஸ் சார்பாக விக்கிரவாண்டியில் யார் போட்டியிடப் போகிறார் என்ற எந்த அறிவிப்பும் வரவில்லை. 

Tamil selvan

இதனையடுத்து, நெல்லை கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் தமிழ்ச்செல்வன் நாங்குநேரியில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், காங்கிரஸ் சார்பாகத் தேர்தலில் போட்டியிட ரூ.25 கோடி ரூபாய் இருந்தால் தான் காங்கிரஸ் சார்பாக போட்டியிட முடியும் என்று கூறி உள்ளூர் பிரமுகர்கள் யாருக்கும் சீட் வழங்கப் படவில்லை, அதனால் தான் சுயேட்சையாக இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாகக் கூறியுள்ளார்.