நாளை முதல் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் ஆர்டிஜிஎஸ் வசதி செயல்படும்- ரிசர்வ் வங்கி

 

நாளை முதல் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் ஆர்டிஜிஎஸ் வசதி செயல்படும்- ரிசர்வ் வங்கி

மின்னணு முறையில் பெருந்தொகைப் பணப் பரிமாற்றம் செய்வதற்கான ஆர்டிஜிஎஸ் வசதி நாளை முதல் ஆண்டு முழுவதும் அனைத்து நாட்களிலும் அதாவது 24 மணி நேரமும் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நாளை முதல் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் ஆர்டிஜிஎஸ் வசதி செயல்படும்- ரிசர்வ் வங்கி

ஒரு வங்கிக் கணக்குகளில் இருந்து மற்றொரு கணக்குக்குப் பெருந்தொகையை மின்னணு முறையில் உடனடியாகப் பரிமாற்றம் செய்வதற்கு ஆர்டிஜிஎஸ் என்னும் வசதி நடைமுறையில் உள்ளது. இப்போது இந்த வசதி வங்கி வேலை நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மின்னணுப் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த வசதியை அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் வழங்கப்படும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி நாளை முதல் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் ஆர்டிஜிஎஸ் வசதி செயல்படும்.