’’மன்மோகன் சிங் சொன்னதுபோல் அவர் ஒரு மாபெரும் பேரழிவு’’

 

’’மன்மோகன் சிங் சொன்னதுபோல் அவர் ஒரு மாபெரும் பேரழிவு’’

கொரோனா இரண்டாவது அலையில் கொத்து கொத்தாக மக்கள் செத்து மடிவதை பார்த்து, கொரோனா இத்தனை தீவிரமாக மாறும் வரைக்கும் என்ன செய்துகொண்டிருந்தார் பிரதமர் மோடி, அவரின் அலட்சியத்தினால்தான் மக்கள் இப்படி செத்து மடிகிறார்கள் என்று பலரும் சொல்லி வருகின்றனர். ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யாததாலும் பல உயிர்கள் பறிபோகின்றன என்ற குற்றச்சாட்டும் மோடி மீது எழுந்துள்ளன.

’’மன்மோகன் சிங் சொன்னதுபோல் அவர் ஒரு மாபெரும் பேரழிவு’’

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, ’’மோடி பத்து வருடங்கள் கேட்டார். ஆனால் அவரால் என்ன சாதிக்க முடியும் என்பதை 7 வருடங்களிலேயே நிரூபித்துவிட்டார். மன்மோகன் சிங் சொன்னதுபோல் அவர் ஒரு மாபெரும் பேரழிவு. நாம் இந்த கொரொனா போரை ஒருவருக்கொருவர் ஒற்றுமை, அன்பு, கனிவுடன் கடப்போம். ’’என்கிறார்.

’’மன்மோகன் சிங் சொன்னதுபோல் அவர் ஒரு மாபெரும் பேரழிவு’’

மேலும் அவர், ‘’ஆர். எஸ். எஸ் / பிஜேபி விதைத்த வெறுப்பையும் பிரிவினையையும் மண்ணில் புதைப்போம். கொரொனாவை விட கொடிய இந்த அரசின் ஆணவத்தால் ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்துகள் இல்லாமல் மதவேறுபாடு இல்லாமல் மக்கள் செத்து மடிகிறார்கள். இந்த வெறுப்பு, பிரிவினை அரசியல் நமக்கு கொடுத்த பரிசு இதுதான். மனிதம் காப்போம்.’’என்று உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.