தாயை கொன்று உடலை சமைத்து சாப்பிட்ட மகன்; மிச்ச உடலை பிரிட்ஜில் வைத்திருந்த கொடூரம்

 

தாயை கொன்று உடலை சமைத்து சாப்பிட்ட மகன்; மிச்ச உடலை பிரிட்ஜில் வைத்திருந்த கொடூரம்

பெற்றெடுத்து வளர்த்த தாயை கொலை செய்து உடலைத் துண்டு துண்டுகளாக வெட்டி சமைத்து நாயுடன் தானும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு மிச்ச உடலை துண்டு துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் டப்பாக்களிலும், ப்ரிட்ஜிக்குள்ளும் வைத்து இருந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தாயை கொன்று உடலை சமைத்து சாப்பிட்ட மகன்; மிச்ச உடலை பிரிட்ஜில் வைத்திருந்த கொடூரம்

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் மரியா சோலேடாட் கோமெஸ்(வயது66). இவரது மகன் ஆல்பர்டோ சஞ்சேஸ் கோமெஸ். கடந்த 2019 ஆம் ஆண்டு தனது மகனால் படுகொலை செய்யப்பட்டார் மரியா. இந்த கொலையின் பகீர் பின்னணி விபரம்:

மரியா கொலை செய்யப்பட்ட சம்பவம் மரியாவின் நண்பர் மூலமாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை எடுத்து போலீசார் வீட்டுக்குள் சென்று விசாரணை நடத்தினர். அப்போது நான் ஆல்பர்ட்டோவும் வளர்ப்பு நாயும் மட்டுமே இருந்துள்ளனர். மரியாவின் உடல் எங்கே என்று கேட்ட போது? இங்கேதான் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். உடனே, போலீசார் வீடு முழுவதும் தேடியபோது, ஒரு அறையை திறந்து பார்த்ததும் அதிர்ந்து போனார்கள். அங்கே மரியாவின் உடல் வெட்டப்பட்டு துண்டு துண்டுகளாக ஆங்காங்கே கிடந்தன. சில பாகங்கள் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. மேலும் சில உடல் பாகங்கள் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்தன. இதை கண்டு அதிர்ந்துபோன போலீசார், ஆர்ல்பர்டோவிடம் சென்று விசாரணை நடத்தினர்.

தாயை கொன்று உடலை சமைத்து சாப்பிட்ட மகன்; மிச்ச உடலை பிரிட்ஜில் வைத்திருந்த கொடூரம்

விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல் கிடைத்தது. ’’அம்மாவுக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வரும் அப்படித்தான் அன்றைக்கு சண்டை வந்தபோது ஆத்திரத்தில் அம்மாவின் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டேன். உடலையும் சமைத்து சாப்பிட்டுவிட்டேன்’’ என்று கூறி அதிர வைத்திருக்கிறார்.

ஆல்பர்டோவின் வாக்குமூலம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஸ்பெயின் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில், ஏன் அம்மாவை கொலை செய்தீர்கள்? என்று துருவித் துருவி விசாரணை நடத்தியதில், அம்மாவை கொலை செய்யும்படி எனக்கு தொலைக்காட்சி வாயிலாக குரல்கள் வந்தன. பிரபலங்களின் பிரபலங்களின், பக்கத்துவீட்டுக்காரன், நணபர்களின் குரல்கள் வந்தன என்று சொன்னவர், தாயின் உடலை ஏன் சாப்பிட்டேன். எப்படி சாப்பிட்டேன் என்று எனக்கு சரியாக நினைவில்லை என்று கூறியிருக்கிறார்.

தாயை கொன்று உடலை சமைத்து சாப்பிட்ட மகன்; மிச்ச உடலை பிரிட்ஜில் வைத்திருந்த கொடூரம்

ஆல்பர்ட்டோ, போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மனநல பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். விசாரணையில் அவர் குற்றவாளி என்பது தெரியவந்தால் 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்கிறது நீதிமன்ற வட்டாரம்.