தம்பி, தங்கைகளுக்கு மீண்டும் மீண்டும் அறிவுறுத்துகிறேன்…சீமான்

 

தம்பி, தங்கைகளுக்கு மீண்டும் மீண்டும் அறிவுறுத்துகிறேன்…சீமான்

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை செயலாளர் தினேஷ்குமார், இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்தது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள இரங்கல்,

தம்பி, தங்கைகளுக்கு மீண்டும் மீண்டும் அறிவுறுத்துகிறேன்…சீமான்

’’திருச்சி மாநகர் மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் ஆற்றல்மிகு களப்போராளி அன்புத்தம்பி தினேசுகுமார் விபத்தில் உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரமும் அடைந்தேன். தம்பிக்கு எனது கண்ணீர் வணக்கம்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’தம்பி தினேசுகுமாரை இழந்து வாடும் குடும்பத்தினரை எத்தகைய வார்த்தைகளைக் கூறித் தேற்றுவது எனத் தெரியாது கலங்கி நிற்கிறேன். மீள முடியாப் பெருந்துயரில் சிக்குண்டிருக்கும் தம்பியின் குடும்பத்தினருக்கு உளவியல் துணையாகவும், உறுதுணையாகவும் நாம் தமிழர் கட்சி இருக்கும் என உறுதியளிக்கிறேன்.

பயணங்களின்போது தலைக்கவசம் உள்ளிட்டப் பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும். மிகுந்த கவனத்தோடும், எச்சரிக்கை உணர்வோடும் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என தம்பி, தங்கைகளுக்கு மீண்டும் மீண்டும் அறிவுறுத்துகிறேன்’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.