பெண் குழந்தை பிறந்ததால் ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்து கொண்டாடும் குடும்பம்

 

பெண் குழந்தை பிறந்ததால் ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்து கொண்டாடும் குடும்பம்

பெண் குழந்தை பிறந்தால் கொலை செய்துவிடும் கொடூரம் இப்போதும் இருக்கத்தான் செய்கிறது. அதேநேரம் பெண் குழந்தை பிறந்தால் தேவதை பிறந்துவிட்டாள், லட்சுமி வந்தாச்சு என்று கொண்டாடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பெண் குழந்தை பிறந்ததால் ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்து கொண்டாடும் குடும்பம்

ஒரு குடும்பத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பெண் குழந்தை எதுவும் பிறக்கவில்லை. தற்போது முதன் முதலாக ஒரு பெண் குழந்தை பிறந்தால் அந்த குடும்பம் கொண்டாடி தீர்க்கிறது.

அந்த குழந்தை பெண் குழந்தையை வரவேற்க ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அசத்தியிருக்கிறது ராஜஸ்தானை சேர்ந்த அந்த குடும்பம். பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் அவர்கள் செலவை பற்றியெல்லாம் கணக்கிடவே இல்லை. இந்த ஹெலிகாப்டரின் வாடகை 4.5 லட்சம் ரூபாயாம்.

கடந்த மாதம் ராஜஸ்தானில் உள்ள நாக்பூரில் இந்த பெண் குழந்தை பிறந்தது. அதை அடுத்து அந்த குழந்தை தனது தாய் வழி பாட்டி- தாத்தா வீட்டுக்கு சென்றிருக்கிறது. பாட்டி வீட்டில் இருந்து மீண்டும் தந்தை வீட்டுக்கு திரும்ப இருக்கிறது அக்குழந்தை.

ஹர்சோலவ் பகுதியிலிருந்து நிம்பரி சண்டவடன் பகுதிக்கு அந்த குழந்தை ஹெலிகாப்டரில் வான்வழியாக வர இருக்கிறது.