கவச உடையை விரும்பாத பயணிகள்; காற்று வாங்கும் விமானங்கள்

 

கவச உடையை விரும்பாத பயணிகள்; காற்று வாங்கும் விமானங்கள்

கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் பயணிகள் வெளியூர் பயணங்களை ரத்து செய்துவிட்டனர். குறிப்பாக விமான பயணிகள் தங்களது பயணங்களை தவிர்த்து வருவதால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து குறைந்த பயணிகளுடன் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

கவச உடையை விரும்பாத பயணிகள்; காற்று வாங்கும் விமானங்கள்

உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் நேற்றைக்கு 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையிலிருந்து கோவை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம், புவனேஸ்வர், கோவா ஆகிய இடங்களுக்குச் செல்லும் 15 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல அந்த நகரங்களில் இருந்து மீண்டும் சென்னைக்கு திரும்பி வரவேண்டிய 15 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர சென்னையிலிருந்து வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு புறப்பட்ட விமானங்களிலும் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்ததன. பல விமானங்கள் பயணிகள் இல்லாமல் காலியாகவே இருந்தன.

கவச உடையை விரும்பாத பயணிகள்; காற்று வாங்கும் விமானங்கள்

விமானத்தில் பயணிகளின் வருகை குறைவாக இருப்பதற்கு கொரோனா அச்சம் ஒரு காரணமாக இருந்தாலும், கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டிய காரணம் இருப்பதாலும் பலர் விமான பயணத்தை தவிர்த்து வருகின்றனர் . பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருக்க வேண்டும், இ-பாஸ் இருக்க வேண்டும், அதுமட்டுமல்லாமல் விமானத்தின் நடு இருக்கையில் அமரும் பயணிகள் கவச உடை அணிந்து தான் பயணிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இப்படிப்பட்ட காரணங்களை விரும்பாத பயணிகள் விமான பயணத்தை தவிர்த்து வருகின்றனர். அதனால்தான் பெரும்பாலான பயணிகள் இல்லாமல் அதிகம் விமானங்கள் காற்று வாங்குகின்றன.