மகனுடன் நிர்வாண போஸ் கொடுத்த பாடகிக்கு ஜாமின் கிடைத்தது

 

மகனுடன் நிர்வாண போஸ் கொடுத்த பாடகிக்கு ஜாமின் கிடைத்தது

தனது 7 வயது மகனின் பிறந்த நாள் பரிசு என்று சொல்லி மகனுடன் ஆபாசமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய பாப் பாடகி ரோஸ்மண்ட் ப்ரவுனுக்கு 90நாள் சிறை தண்டனை வழங்கப்பட்டதை. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ததில் பாடகிக்கு ஜாமின் கிடைத்திருக்கிறது.

மகனுடன் நிர்வாண போஸ் கொடுத்த பாடகிக்கு ஜாமின் கிடைத்தது

கானா நாட்டை சேர்ந்தவர் பாப் பாடகி ரோஸ்மண்ட் ப்ரவுன் எனும் அகுப்பம் போலோ. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது 7வயது மகன் பிறந்த தினத்தன்று மகனுடன் ஆடை இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். ஆடையில் இல்லாமல் நிர்வாணமாக சிறுவன் நிற்பது போன்றும், சிறுவன் முன்பு பிரவுன் நிர்வாணமாக மண்டியிட்டு அவன் கைகளை பிடித்துக்கொண்டிருக்கும் போட்டோக்களால் சர்ச்சை எழுந்தது.

மகனுடன் நிர்வாண போஸ் கொடுத்த பாடகிக்கு ஜாமின் கிடைத்தது

இந்த விவகாரத்தில் கானா தலைநகரில் உள்ள அக்ரா நீதிமன்றம், ஆபாம் -வன்முறைக்கு கீழான சட்டத்தின் கீழ் இது குடும்ப வன்முறைக்குள் அடங்கும் என்று அகுப்பம் போலோவுக்கு 90 நாள் சிறைதண்டனை விதித்தது. ஆபாசமான விசயங்களை வெளியிடுவது, தனிநபரின் ஒருமைப்பாட்டை குறைத்து மதிப்பிடுவது, சுய கவுரவத்திற்கு தீங்கிழைக்கும் வீட்டு வன்முறை ஆகிய மூன்று குற்றங்களுக்காக இந்த மூன்று மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பினை கேட்டு கண்ணீர் வடித்தார் பிரவுண். தீர்ப்பினை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். சிறுவனின் நலம் கருதியும், பிரவுண் முதல்முறை குற்றவாளி என்பதாலும் 10 லட்சம் ரூபாய் ஜாமின் கொடுத்து தீர்ப்பளித்தார் நீதிபதி கிறிஸ்டியானா.