ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி

 

ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி

சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, குடலிறக்க அறுவை சிகிச்சை முடிந்து செவ்வாய்க்கிழமை அன்று வீடு திரும்பினார்.

ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி

ஓரிரு நாட்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் வீட்டில் ஓய்வில் இருந்த முதல்வரை, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதன் பின்னர் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.,எம். மருத்துவமனையில் இன்று பிற்பகல் அனுமதிக்கப்பட்டார்.

இம்மருத்துவமனையில் ஏற்கனவே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தார். அதன் காரணமாக நடைபெறும் வழக்கமான உடல் பரிசோதனைக்காக மட்டுமே துணை முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது.