சாக்கு மூட்டைக்குள் கிடந்த கல்லூரி மாணவியின் சடலம்: காதலன் செய்த கொடூரம்

 

சாக்கு மூட்டைக்குள் கிடந்த கல்லூரி மாணவியின் சடலம்: காதலன் செய்த கொடூரம்

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே பொறையூர் சுடுகாட்டில் மர்மமான முறையில் ஒரு சாக்குமூட்டை கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சாக்கு மூட்டையை போலீசார் அவிழ்த்து பார்த்தபோது, இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

சாக்கு மூட்டைக்குள் கிடந்த கல்லூரி மாணவியின் சடலம்: காதலன் செய்த கொடூரம்

கொலை செய்யப்பட்டு அவர் சாக்குமூட்டையில் கட்டி வீசப்பட்டிருக்கிறார் என்பதை உணர்ந்த போலீசார் அந்த இளம் பெண் யார் என்பது குறித்து விசாரித்து வந்தனர். இதற்கிடையில் புதுச்சேரி சந்தை புதுக்குப்பம் ராமன், தனது மகளை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

போலீசார் உறவினரிடம் விசாரித்ததில், ராஜஸ்ரீ, சேதராப்பட்டு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்ததும், பொறையூரை சேர்ந்த பிரதீஷை காதலித்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை செய்ததில் பொறையூரைச் சேர்ந்த பிரதீஷை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் ராஜஸ்ரீ தன்னை காதலித்துக் கொண்டே மற்ற ஆண் நண்பர்களுடன் அடிக்கடி பேசி வந்தார். இதனால் சந்தேகப்பட்டு அவருடன் அடிக்கடி சண்டை போட்டு வந்தேன். தொடர்ந்து ஆண் நண்பர்களுடன் பேசி வந்ததால் எனக்கு கோபம் வந்தது.

சாக்கு மூட்டைக்குள் கிடந்த கல்லூரி மாணவியின் சடலம்: காதலன் செய்த கொடூரம்

இதனால் பொறையூர் சுடுகாட்டிற்கு ராஜேஸ்வரியை கூப்பிட்டேன். அங்கு வந்ததும் அவருடன் இனி மற்ற ஆண்களுடன் பேசக்கூடாது என்று கண்டித்தேன். அதற்கு ராஜேஷ் கேட்கவில்லை. இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்து என் தம்பி உதவியுடன் ராஜேஸ்வரியை கொலை செய்து சாக்கு மூட்டையில் அடைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டோம் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து பிரதீஷை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் அவனது தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.