தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் நடிகர் விவேக்… கே.எஸ்.அழகிரி பரபரப்பு

 

தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் நடிகர் விவேக்… கே.எஸ்.அழகிரி பரபரப்பு

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்கின்ற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கோவிட் உதவி மையத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் செயல் தலைவர்கள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் நடிகர் விவேக்… கே.எஸ்.அழகிரி பரபரப்பு

பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அழகிரி, ‘’கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மோடி -எடப்பாடி அரசு தோல்வியடைந்துவிட்டது. கொரோனாவால் கொத்துக்கொத்தாக மக்கள் மடிந்து வருகையில் மயில்களுக்கு உணவளித்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.’’என்று கடுமையாக சாடினார்.

மேலும் அவர், ’’கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு தீர்வாகாது’’என்றார். ’’மெய்யறிவு இல்லாத மத்திய அரசு கும்பமேளாவை எப்படி அனுமதித்தது?’’என்று கேள்வி எழுப்பியவரிடம், விவேக் சர்ச்சை குறித்து கேள்வி எழுந்தபோது, ‘’ நடிகர் விவேக் மாரடைப்பால் உயிரிழந்ததற்கும் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் நடிகர் விவேக் மரணமடைந்தார் என்று சிலர் விஷம பிரச்சாரம் செய்கின்றனர்’’ என்று அவர் தெரிவித்தார்.