வெளியேறும் வடமாநிலத்தவர்கள்; நிரம்பி வழியும் சென்னை சென்ட்ரல்

 

வெளியேறும் வடமாநிலத்தவர்கள்; நிரம்பி வழியும் சென்னை சென்ட்ரல்

தமிழகத்தில் இப்போது ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் முழு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம் இரவு நேர ஊரடங்கும் அமலுக்கு வந்திருக்கிறது. இதனால் முழு ஊரடங்கு உத்தரவு எந்த நேரத்திலும் வந்து விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் பொதுமக்கள். இதில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த குறிப்பாக வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

வெளியேறும் வடமாநிலத்தவர்கள்; நிரம்பி வழியும் சென்னை சென்ட்ரல்

கடந்த முறை திடீரென்று முழு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துவிட்டதால் பொது போக்குவரத்து முடங்கியதால் சொந்த மாநிலத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதியுற்றனர் வடமாநிலத்தவர்கள். பலர் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் நடந்தே சென்று தங்கள் சொந்த ஊருக்கு சேர்ந்தனர். அப்படி ஒரு நிலைமை மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த முறை வடமாநிலத்தவர்கள் குறிப்பாக சென்னையில் தங்கி இருக்கும் வடமாநிலத்தவர்கள் முன்னெச்சரிக்கையாக தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட தயாராகி விட்டார்கள்.

வெளியேறும் வடமாநிலத்தவர்கள்; நிரம்பி வழியும் சென்னை சென்ட்ரல்

தமிழகத்தில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம் உத்தரகாண்ட், அசாம் போன்ற மாநிலங்களில் இருந்துதான் பெருவாரியான தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வருகிறார்கள் வடமாநில தொழிலாளர்கள் பொருத்தவரைக்கும் சம்பளம் 25 சதவீதம் வரை குறைவாக உள்ளது. ஆனால், அதிக நேரம் வேலை பார்க்கிறார்கள். தங்குவதற்கு இடம் கொடுத்தால் போதும் வேலை செய்து விடுகிறார்கள். குறிப்பிட்ட காலத்திற்குள் வேலை முடிந்துவிடும் என்பதால் வட மாநிலத் தொழிலாளர்களை தமிழக முதலாளிகள் அதிகம் விரும்புகிறார்கள்.

கடந்த ஆண்டு ஊரடங்கு அமலுக்கு வந்த போது இவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். பலர் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் திண்டாடினார்கள். இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் வடமாநில தொழிலாளர்கள் கலக்கம் அடைந்து விட்டனர் . அவர்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து சொந்த ஊருக்கு செல்கிறார்கள். இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து வட மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் நிரம்பி வழிகின்றன. அடுத்த ரயிலுக்காக காத்திருப்பவர்களால் சென்னை ரயில் நிலையம் நிரம்பி வழிகிறது.