அவன் இல்லையே..துக்கம் தொண்டையை அடைக்குது..வடிவேலு கண்ணீர்

 

அவன் இல்லையே..துக்கம் தொண்டையை அடைக்குது..வடிவேலு கண்ணீர்

நடிகர் விவேக்கின் மரணத்திற்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆனாலும் அவருக்கு இணையான நகைச்சுவையில் கலக்கி வந்த நடிகர் வடிவேலு வரவில்லையே என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் மதுரையிலிருந்து வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார் .

அவன் இல்லையே..துக்கம் தொண்டையை அடைக்குது..வடிவேலு கண்ணீர்

அந்த வீடியோவில், ‘’ என் நண்பன் விவேக் ஹார்ட் அட்டாக்கினால் இறந்துட்டான் என்று இன்றைக்கு காலையில் செய்திகளில் பார்த்து தெரிந்து கொண்டேன். நான் மதுரையில் இருக்கிறேன். அந்த செய்தியைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகிவிட்டது . அதை பற்றி பேசவே முடியவில்லை. அவன் இல்லையே… எனக்கு துக்கம் தொண்டையை அடைக்கிறது.

அவன் இல்லையே..துக்கம் தொண்டையை அடைக்குது..வடிவேலு கண்ணீர்

என்னோட அவன் ரொம்ப படங்களில் இணையாக பணியாற்றியிருக்கிறான். அவன் ரொம்ப ஓபன் ஆக பேசக்கூடியவன். என்னைவிட ரொம்ப எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி பேசுவான் மனசை வரும்படியும் பேசுவான். எனக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் அவனும் ஒருவன். அவனுக்கு நானும் ரசிகன்.

அவனுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த என்னால் முடியவில்லை. என் நெஞ்சார்ந்த இரங்கலை அவன் குடும்பத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று குரல் உடைந்து பேசியிருக்கிறார் வடிவேலு.