தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் செய்தவர் நண்பர் விவேக்…கமல்

 

தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் செய்தவர் நண்பர் விவேக்…கமல்

’’நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு.’’என்று தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்.

தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் செய்தவர் நண்பர் விவேக்…கமல்

நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட மாரடைப்பு குறித்து பலரும் பலவிதமாக பேசியபோது, ‘’கொரோனா தடுப்பூசி மீதான பொது மக்களின் அச்சம் தீர வேண்டும் என்பதற்காகவே அரசு மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர் நண்பர் விவேக். அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென விரும்புகிறேன். அவரது உடல் நலக் குறைவுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்தப் பெருந்தொற்று காலத்தில் நாம் தேவையற்ற அச்சம் கொள்வதை, வதந்திகளைப் பரப்புவதை நிறுத்தி விட்டு அரசுடன் ஒத்துழைப்போம்’’என்று தெரிவித்திருந்தார் கமல்.

இந்நிலையில் விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும், இரங்கல் தெரிவித்திருக்கிறார்.