’’மாபெரும் கலைஞனே…என்ன நடக்கின்றது?’’அதிர்ந்த திரையுலகம்

 

’’மாபெரும் கலைஞனே…என்ன நடக்கின்றது?’’அதிர்ந்த திரையுலகம்

நடிகர் விவேக்கின் திடீர் மறைவு திரை பிரபலங்கள் பலரையும் அதிரவைத்திருக்கிறது. அவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

’’மாபெரும் கலைஞனே…என்ன நடக்கின்றது?’’அதிர்ந்த திரையுலகம்

’’சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக் அவர்களின் பிரிவு … வார்த்தைகளில் சொல்ல முடியாதத் துயர்!’’என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார் நடிகரும் இயக்குருமான ஆர்.பார்த்திபன்.

’’இதை நம்ப முடியவில்லை … அவர் நம்மை சிரிக்க வைத்தார், அவர் தனது நடிப்பின் மூலம் எங்களுக்குக் கல்வி கற்பித்தார், இந்த உலகத்தை கவனித்து, அதை எவ்வாறு கவனித்துக்கொள்வது என்பதைக் கற்பிக்க உதவினார்.உங்களைப் போல இன்னொருவர் இருக்க மாட்டார் ஐயா.நாங்கள் உங்களை மிஸ் செய்கிறோம். சாந்தியடைய
வேண்டுகிறேன்.’’என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார் நடிகர் கவுதம் கார்த்திக்.

’’மாபெரும் கலைஞனே..மனம் உடைந்து போனேன். பெரிய இழப்பு. என்ன நடக்கின்றது?’’ என்று அதிர்ச்சியில் உறைந்து சொல்கிறார் நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா.

’’நொறுங்கியது !! நம் காலத்தின் மிகப் பெரிய நகைச்சுவை நடிகர் இனி இல்லை என்பதை அறிந்து மனம் உடைந்தது !! உங்களை எப்போதும் இழந்துவிட்டோமே’’என்று கவலையை தெரிவிக்கிறார் இயக்குநர் அஜய்ஞானமுத்து.