விவேக் பற்றிய செய்திகள் வேதனையளிக்கிறது…சீமான்

 

விவேக் பற்றிய செய்திகள் வேதனையளிக்கிறது…சீமான்

மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனி தனி்யார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள், ’’சுய நினைவின்றி மருத்துவமனைக்கு விவேக் கொண்டு வரப்பட்டார். விவேக்கிற்கு ரத்த நாளத்தில் பிளாக் இருந்தது.

விவேக் பற்றிய செய்திகள் வேதனையளிக்கிறது…சீமான்

அதை ஆஞ்சியோ செய்து சரி செய்தார்கள். அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை 24 மணி நேரம் ஐ.சி.யூவில் வைத்த பிறகு தான் மறுபரிசீலனை செய்ய உள்ளோம். இது சாதாரண கார்டியாக் அர்ரெஸ்ட் தான். இதற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி ஏதும் மில்லை’’ என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘’அருமைச் சகோதரர் விவேக் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக வெளியாகும் செய்திகள் வேதனையளிக்கிறது. அவர் விரைவில் முழு உடல்நலம் பெற்று வீடு திரும்பி தனது கலைப்பணியைத் தொடர வேண்டுமென உள்ளன்போடு விழைகிறேன்.’’என்று தெரிவித்திருக்கிறார்.