’’பா.ம.க.வுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது’’-ராமதாஸ்

 

’’பா.ம.க.வுக்கு  மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது’’-ராமதாஸ்

இந்தியா முழுவதும் CBSE பாடத்திட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை. கொரோனா காலத்தில் மாணவர் நலன் கருதி எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை இதுவாகும் என்று தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

’’பா.ம.க.வுக்கு  மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது’’-ராமதாஸ்

அவர் மேலும், ‘’சி.பி.எஸ்.இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி தான் குரல் கொடுத்தது. அந்த வகையில் மத்திய அரசின் நடவடிக்கை பா.ம.க.வுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது!

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்; குறைந்தபட்சம் CBSE போன்று 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்திவைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்!’’என்று தெரிவித்திருக்கிறார்.