’’அதிமுகதான் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும்’’- அழுத்தமாக சொல்லும் எல்.முருகன்

 

’’அதிமுகதான் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும்’’- அழுத்தமாக சொல்லும் எல்.முருகன்

அதிமுக பாஜக கூட்டணி தமிழகத்தில் அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று உறுதியாக சொல்கிறார் தமிழக பாஜக தலைவர் எல். முருகன்.

’’அதிமுகதான் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும்’’- அழுத்தமாக சொல்லும் எல்.முருகன்

ஆந்திர மாநிலத்தில் திருப்பதி பாராளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் இம்மாதம் 17ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம், பாரதிய ஜனதா, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் சுயேட்சை வேட்பாளர்களும் இத்தேர்தலில் களத்தில் உள்ளனர்.

இத்தகைய பரபரப்பான சூழலில் திருப்பதியில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தனது ஆதரவாளர்கள் 300 பேருடன் திருப்பதி சென்று முகாமிட்டிருக்கிறார்.

திருப்பதியில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் அவர் பிரச்சாரத்தை துவக்குவதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த கேள்விக்கு, ’’நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவில் அதிமுக பாஜக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும்’’ என்று அவர் அழுத்தமாகக் கூறினார்.