லிப்ட் கேட்டு வந்தவர் பெட்ரோல் போட பணம் தராததால்.. நள்ளிரவில் நடந்த கொடூரம்

 

லிப்ட் கேட்டு வந்தவர் பெட்ரோல் போட பணம் தராததால்.. நள்ளிரவில் நடந்த கொடூரம்

சென்னை கொளத்தூர் பகுதியில் சாலையோரம் கடந்த 4 ஆம் தேதி அன்று அதிகாலையில் 47 வயதுடைய வாலிபர் ஒருவர் உடல் கிடந்தது தெரியவந்ததும் போலீசார் அந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

லிப்ட் கேட்டு வந்தவர் பெட்ரோல் போட பணம் தராததால்.. நள்ளிரவில் நடந்த கொடூரம்

விசாரணையில் அந்த வாலிபர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் என்பது தெரியவந்தது. கொளத்தூரில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக நள்ளிரவில் வந்தவர் சாலையில் உயிரிழந்து கிடந்தது ஏன் என்று போலீசார் மேலும் விசாரணை நடத்தினர்.

அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டதில், ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று நள்ளிரவு இரண்டு முப்பது மணிக்கு சங்கர், ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வந்து இறங்குகிறார். வாகனத்தில் வந்தவர் சங்கருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பின்னர் சங்கரை அடித்து கீழே தள்ளி விடுகிறார். அதன் பின்னர் அவர் பையில் இருந்து எதையோ எடுத்து விட்டு பைக்கில் எஸ்கேப் ஆகிறார்.

இந்த வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வந்ததில் பைக்கில் வந்தவர் கொளத்தூர் அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், நாலாம் தேதி இரவு மது அருந்திவிட்டு தான் பைக்கில் வந்ததாகவும் ரெட்டேரி வழியாக வந்தபோது சங்கர் லிப்ட் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

லிப்ட் கேட்டு வந்தவர் பெட்ரோல் போட பணம் தராததால்.. நள்ளிரவில் நடந்த கொடூரம்

அவர் மேலும், லிப்ட் கேட்டு வந்த சங்கரை வளர்மதி நகருக்கு அழைத்து வந்து விட்டுவிட்டு பெட்ரோல் போட நூறு ரூபாய் பணம் கொடு என்று கேட்டதாகவும் அப்போது பணம் இல்லை என்று சங்கர் சொன்னதால் ஆத்திரத்தில் அவரை அடித்தபோது கீழே விழுந்து மயக்கமாகி விட்டார். எழுப்பி பார்த்ததும் எழுந்திருக்காததால் அவர் மயங்கி கிடக்கிறார் என்று நினைத்து அவர் பையிலிருந்த ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு சென்று விட்டேன். ஆனால் அவர் பின் தலையில் அடிபட்டு இறந்து போவார் என்று நான் நினைக்கவே இல்லை என்று சொல்லியிருக்கிறார்.

சசிகுமார் கொடுத்த வாக்குமூலத்தை பெற்றுக் கொண்ட போலீசார் அவரை கொலை வழக்கில் கைது செய்துள்ளனர்.

லிப்ட் கேட்டு வந்தவர் பெட்ரோல் போட பணம் தராததால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கொளத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.