நீதிமன்றத்திற்கு செல்லும் வெள்ளாடு வழக்கு

 

நீதிமன்றத்திற்கு செல்லும் வெள்ளாடு வழக்கு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர காவல் நிலைய போலீசார் நேற்று முன் தினம் இரவு ரோந்து பணி்யில் இருந்தபோது, இரண்டு இளைஞர்களும் ஒரு வெள்ளாடுடன் பைக்கில் சென்றனர்.

நீதிமன்றத்திற்கு செல்லும் வெள்ளாடு வழக்கு

சந்தேகத்தில் அவர்களை மடக்கி விசாரித்தபோது அவர்கள் பைக் மற்றும் ஆட்டினை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து ரோந்து போலீசார், ஆடு மற்றும் பைக்கினை திருச்செங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர்.

வெள்ளாட்டினை திருடிவிட்டு வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார், பைக்கையும் அவர்கள் திருடிவிட்டு வந்திருக்கலாம் என்று சந்தேகின்றனர்.

இன்று ஞாயிறு கோர்ட்டுக்கு விடுமுறை. நாளை நீதிமன்றத்திற்கு செல்கிறது இந்த வழக்கு. அதுவரைக்கும் வெள்ளாட்டுக்கு தீவணம், தண்ணீர் வைத்து பராமத்து வருகின்றனர் போலீசார்.