சித்தி வீட்டில் இருந்த சிறுமிக்கு… சித்தப்பா கைது

 

சித்தி வீட்டில் இருந்த சிறுமிக்கு… சித்தப்பா கைது

திருச்செங்கோட்டை அடுத்த வாய்க்கால் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரன் (வயது43). தறித்தொழிலாளி்யான புவனேஸ்வரனின் மனைவியின் சகோதரி தனது கணவரை பிரிந்து 2 திருமணம் செய்துகொண்டிருக்கிறார். அவர் தனது 2வது கணவருடன் ஈரோட்டில் வசித்து வருகிறார்.

சித்தி வீட்டில் இருந்த சிறுமிக்கு… சித்தப்பா கைது

இதனால் அப்பகுதி்யில் உள்ள இளைஞரை காதலிக்கிறார் என்பதற்காக தனது சகோதரி வீட்டில், அதாவது புவனேஸ்வரன் வீட்டில் கொண்டு போய் விட்டிருக்கிறார். அங்கேயே இரண்டு வருடங்கள் வளர்ந்து வந்திருக்கிறார் சிறுமி.

சித்தி வீட்டில் வாழ்ந்து வந்தில் சிறுமிக்கும் சித்தப்பா புவனேஸ்வரனுக்கும் பழக்கம் ஏற்பட்டு இரண்டு வருடங்களாக உறவு வைத்து வந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த சில தினங்களூக்கு முன்பாக வயிற்று வலியால் சிறுமி துடித்ததும், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் மூன்று மாத கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரியவந்ததும் சிறுமி என்பதால் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் புவனேஸ்வரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.