ஆம்லேட்டை பிடிங்கி தின்றதால் ஆத்திரம்: கழுத்தில் மிதித்து இளைஞர் படுகொலை

 

ஆம்லேட்டை பிடிங்கி தின்றதால் ஆத்திரம்: கழுத்தில் மிதித்து இளைஞர் படுகொலை

டாஸ்மாக் பாரில் ஆம்லேட்டை பிடிங்கி தின்றதால் ஆத்திரம் அடைந்த இளைஞர் காலால் மிதித்து இளைஞரை படுகொலை செய்த சம்பவம் புழல் ஏரியாவை அதிரவைத்திருக்கிறது.

ஆம்லேட்டை பிடிங்கி தின்றதால் ஆத்திரம்: கழுத்தில் மிதித்து இளைஞர் படுகொலை

சென்னை அடுத்த புழல் லட்சுமிபுரம் சாலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக வந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், சாலையில் நடந்து வந்தவரின் கழுத்தில் காலால் மிதித்து படுகொலை செய்தது தெரியவந்தது.

கொலை செய்தவர் யார் என்று வீடியோ காட்சிகளை வைத்து விசாரித்ததில், அசோகா தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பது தெரியவந்தது. கிருஷ்ணமூர்த்தியை பிடித்து போலீசார் விசாரித்தபோது, டாஸ்மாக் பாரில் தனது ஆம்லேட்டை அன்பழகன் பிடிங்கி சாப்பிட்டதால் ஆத்திரத்தில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

கொலை வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணமூர்த்தியின் கூட்டாளி அப்புவை தேடி வருகின்றனர்.

ஆம்லேட்டுக்காக ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் புழல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.