விரிவான விவரங்கள் ஓரிரு நாட்களில்… ஏன் சஸ்பென்ஸ் வைக்கிறார் ராமதாஸ்?

 

விரிவான விவரங்கள் ஓரிரு நாட்களில்… ஏன் சஸ்பென்ஸ் வைக்கிறார் ராமதாஸ்?

தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 6 தேதி அன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. வரும் மே-2ம் தேதி அன்று வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன.

விரிவான விவரங்கள் ஓரிரு நாட்களில்… ஏன் சஸ்பென்ஸ் வைக்கிறார் ராமதாஸ்?

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், ‘’நியாயமான, சுதந்திரமான முறையில் தேர்தல்களை நடத்துவதற்காக மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் அளித்த 40 பரிந்துரைகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இது குறித்து விரிவான, விவரங்கள் ஓரிரு நாட்களில்.’’என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடைபெறவில்லை என்று அவர் சொல்ல வருகிறாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. விவரங்களை ஓரிரு நாட்களுக்கு தள்ளிப்போட்டு ஏன் சஸ்பென்ஸ் வைக்கிறார் என்றும் கேள்வி எழுந்திருக்கிறது.