நீதிபதி முன்பு கழுத்தில் பிளேடை வைத்துக்கொண்டு கைதி கண்ணீர்

 

நீதிபதி முன்பு கழுத்தில் பிளேடை வைத்துக்கொண்டு கைதி கண்ணீர்

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பாண்டியன், கொலைவழக்கிக்ல் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கிறார். வேறொரு வழக்கின் விசாரனைக்காக அவரை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ரவி முன்பு ஆஜர்படுத்தினர் .

நீதிபதி முன்பு கழுத்தில் பிளேடை வைத்துக்கொண்டு கைதி கண்ணீர்

விசாரணையின்போது, நீதிபதியின் கேள்விகளுக்கு அழுதுகொண்டே பதில் சொல்லிய பாண்டியன், திடீரென்று கையில் வைத்திருந்த பிளேடை கழுத்தில் வைத்துக்கொண்டு, சிறைத்துறை அதிகாரிகள் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறிக்கொண்டே கழுத்தை அறுத்துக்கொண்டார். நீதிமன்றம் இதனால் பதற்றமடைந்த நேரத்தில், போலீசார் ஓடிவந்து பாண்டியனை பிடிக்க முற்பட்டபோது, அதிகாரிகளின் கொடுமை சம்பந்தமாக கடிதம் எழுதி வைத்திருக்கிறேன். அந்த கடிதத்தை படித்துவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிக்கு கோரிக்கை விடுத்தார்.

கழுத்தை அறுத்துக்கொண்ட பாண்டியனை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் போலீசார்.