கொரோனா இல்லாத நாடா? சர்வதே நிபுணர்களின் சந்தேகம்

 

கொரோனா இல்லாத நாடா? சர்வதே நிபுணர்களின் சந்தேகம்

கொரோனா வைரஸ் உலகில் பரவ தொடங்கியது முதற்கொண்டே கிழக்கு ஆசிய நாடான வடகொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனோ வைரஸ் இல்லை என்று அந்நாடு கூறிவருகிறது. ஆனால், மோசமான சுகாதார கட்டமைப்பைக் கொண்ட வடகொரியாவில் வைரஸ் பாதிப்பு இல்லை என்று சொல்லுவதை நம்ப முடியாது என்று சர்வதேச நிபுணர்கள் ஆரம்பம் முதற்கொண்டே கூறிவருகின்றனர்.

கொரோனா இல்லாத நாடா? சர்வதே நிபுணர்களின் சந்தேகம்

இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வரும் நிலையிலும், தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் இல்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது வடகொரியா.

இதுகுறித்து வடகொரியாவுக்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி, ’’கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி வடகொரியாவில் 23 ஆயிரத்து 121 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் யாருக்கும் தொற்று உறுதி இல்லை என்று வந்ததாகவும், கடந்த மார்ச் 26-ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை 732 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகளையும் உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா வழங்கவில்லை. ஆனால், எத்தனை பேர் அறிகுறிகளுடன் இருக்கிறார்கள். தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள் என்கிற விவரங்களையும் வடகொரிய அரசு கூறுவில்லை’’ என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.

இதற்கிடையில், வடகொரியாவின் தலைநகரில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் பேசிய அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் அன், ‘’சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகளால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு மத்தியில் கொரோனா கட்டுப்பாடுகளால் உருவான பொருளாதார இழப்பு நாட்டை மிக மோசமான நிலைக்கு கொண்டு சென்று இருக்கிறது’’ என்று கவலை தெரிவித்திருக்கிறார்.