ஸ்டாலினுக்கு குவிந்த வாழ்த்துக்கள்

 

ஸ்டாலினுக்கு குவிந்த வாழ்த்துக்கள்

ஸ்டாலினுக்கு குவிந்த வாழ்த்துக்கள்

234 தொகுதிகளில் அதிமுக 179 தொகுதிகளிலும், திமுக 173 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. நேற்று முன் தினம் வரைக்கு இரு கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் இருந்தனர். நேற்று முன் தினத்துடன் பிரச்சாரம் ஓய்வடைந்தால், நேற்று வேட்பாளர்கள் அனைவரும் கொஞ்சம் ஓய்வில் இருந்தனர். அதே நேரம் இன்றைக்கு வாக்குப்பதிவு என்பதால் டென்சனிலும் இருந்தனர்.

நேற்று மாலை அனைத்து வேட்பாளர்களுக்கும் ஸ்டாலினிடம் இருந்து போன் போயிருக்கிறது. என்னமோ ஏதோ என்று அனைவரும் பதற்றத்துடன் போனை எடுக்க, ‘’எவ்வளவு ஓட்டு வாங்குவீங்க..லீடிங் எவ்வளவு வரும்..வெற்றிக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்’’ என்று சொல்லி இருக்கிறார்.

எல்லா வேட்பாளர்களிடமும் இதே வார்த்தைகளைத்தான் சொல்லி இருக்கிறார்.

பதிலுக்கு வேட்பாளர்களும், தங்களின் தொகுதி கணிப்பினை சொல்லிவிட்டு, ‘முதல்வராக வாழ்த்துக்கள்’என்று சொல்ல, பூரித்துப்போனாராம் ஸ்டாலின்.