அதிகாரத்தை கொடுக்க சிந்திக்கத்தான் வேண்டும்;வைரமுத்து

 

அதிகாரத்தை கொடுக்க சிந்திக்கத்தான் வேண்டும்;வைரமுத்து

தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறது.

அதிகாரத்தை கொடுக்க சிந்திக்கத்தான் வேண்டும்;வைரமுத்து

வாக்காளர்கள் ஒவ்வொருவரும் வாக்களிப்பதன் கடமை குறித்து கவிஞர் வைரமுத்து ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில், ’’வாக்களித்தல் என்பது உங்கள் உரிமை மட்டும் அல்ல;அதிகாரம். அதிகாரத்தை கொடுக்கும் அதிகாரம். அன்பை கொடுக்க சிந்திக்க தேவையில்லை. அதிகாரத்தை கொடுக்க சிந்திக்கத்தான் வேண்டும். வாக்களிக்கும் முன் சிந்திக்க மறுக்காதீர். சிந்தித்த பின் வாக்களிக்க தயங்காதீர்கள்’’என்று தெரிவித்திருக்கிறார்.