சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் மட்டுமே 2,400 பேருக்கு கொரோனா உறுதி!

 

சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் மட்டுமே 2,400 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 2,721 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் சென்னையில் மேலும் 2,082 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 64,689 ஆக அதிகரித்தது. மேலும், மொத்த பாதிப்பில் சென்னையில் மட்டுமே 63.31% பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் மட்டுமே 2,400 பேருக்கு கொரோனா உறுதி!

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் மக்கள் வெவ்வேறு மாவட்டங்களுக்குப் புலம் பெயர ஆரம்பித்த நிலையில், மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு பன்மடங்காக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தேனி, விருதுநகர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்த வண்ணம் இருக்கிறது.

இந்த நிலையில் சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் மட்டுமே 2,400 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. திருவள்ளூரில் 127 பேருக்கும், கோவையில் 74 பேருக்கும், மதுரையில் 280 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.