“சபலத்தையும் தீர்த்து கொள்வார் ,சம்பளத்தையும் எடுத்து கொள்வார்” – பெண் அதிகாரிக்கு கணவரின் கொடுமை.

 

“சபலத்தையும் தீர்த்து கொள்வார் ,சம்பளத்தையும் எடுத்து கொள்வார்” – பெண் அதிகாரிக்கு கணவரின் கொடுமை.


ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரியும் பெண்ணை வரதட்சணை கொடுமை செய்த அவரின் மாமியார் மற்றும் கணவரை போலீசார் கைது செய்தார்கள்


குஜராத்தின் ஆனந்த நகரைச் சேர்ந்த 24 வயது பெண்னொருவர் ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார் .அவர் தன்னுடைய ஆபிசில் வேலை பார்க்கும் ஒருவரை கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார் .அப்போது முதல் அவருக்கும் அவரின் மாமியாருக்கும் வரதட்சணை தகராறு இருந்துள்ளது .மேலும் அவரின் கணவரும் ஜெர்மன் நாட்டுக்கு வேலைக்காக சென்று விட்டார் .
அதனால் அந்த பெண்ணும் அவரின் மாமியாரும் தனியாக இருந்துள்ளார்கள் .அப்பேது அந்த மாமியார் அந்த மருமகளை வீட்டு வேலைகள் செய்ய சொல்லியும் ,அவரின் முழு சம்பள பணத்தையும் எடுத்துக்கொண்டும் ,அவருக்கு சிலவுக்கு கூட பணம் தராமல் கொடுமை செய்துள்ளார் .மேலும் ஆபாசமான சொற்களை கொண்டு திட்டியுள்ளார் .அவரின் மகளும் சேர்ந்து கொண்டு அந்த பெண்ணை அடித்து கொடுமை செய்துள்ளார்
இதற்கிடையே அவரின் கணவர் ஜெர்மனிலிருந்து திரும்பி வந்ததும் அந்த பெண்ணிடம் தான் ஒரு வீடு வாங்க யிருப்பதாகவும், அதற்கு பணம் வேண்டுமென்றும், அதனால் அவரின் தந்தையிடம் 10 லட்ச ரூபாய் பணம் வாங்கி வரச்சொல்லி கொடுமைப்படுத்தியுள்ளார் .அதனால் அந்த பெண்ணை நள்ளிரவில் அடித்து உதைத்து அவரின் தாய வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளார் .அதனால் கடுமையா பாதிக்கப்பட்ட அந்த பெண் அங்குள்ள காவல் நிலையத்தில் தன்னுடைய தந்தையோடு சென்று புகார் கூறினார் .
போலீசார் அந்த கணவர் மற்றும் அவரின் மாமியார் மீது வரதட்சணை புகாரை பதிவு செய்தார்கள் ,மேலும் அவர்களை விசாரித்து வருகிறார்கள்.

“சபலத்தையும் தீர்த்து கொள்வார் ,சம்பளத்தையும் எடுத்து கொள்வார்” – பெண் அதிகாரிக்கு கணவரின் கொடுமை.