“பணத்துக்கு பதிலா பலாத்காரம் பண்ணிக்கோ” -பத்தாயிரம் ரூபாய் கடனுக்கு கட்டிய மனைவியை விற்ற நபர்

 

“பணத்துக்கு பதிலா பலாத்காரம் பண்ணிக்கோ” -பத்தாயிரம் ரூபாய் கடனுக்கு கட்டிய மனைவியை விற்ற நபர்

ஒரு குடிகார கணவன் தான் வாங்கிய 10000ரூபாய் கடனை கட்டமுடியாததால் ,தன்னுடைய மனைவியை பலாத்காரத்துக்கு அனுமதித்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது .

உத்ரகாண்டு மாநிலத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள டெஹ்ராடூனில் ஒரு குடிகார கணவன், ஒருவரிடம் 10000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார் . அதனால் அந்த கடன் காரர் அந்த குடிகாரரிடம் அந்த கடனை கேட்டு தொல்லை கொடுத்தார் .ஆனால் அவருக்கு இந்த ஊரடங்கு காரணமாக சரியான வேலையும் இல்லை ,வருமானமும் இல்லை .அதனால் அவர் அந்த 10000 ரூபாய் கடனை கட்ட முடியாமல் அவதிப்பட்டார் .


இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று அந்த கடன்காரர் அவரின் வீட்டிற்கு வந்து கடனை கட்டுமாறு மீண்டும் டார்ச்சர் கொடுத்தார் .அப்போது அந்த குடிகாரருக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது .அதன்படி அவர் அந்த கடன் கொடுத்தவரிடம் தன்னிடம் இப்போது பணமில்லையென்றும் ,அதற்கு பதிலாக உள்ளே தன்னுடைய அழகான 22 வயது மனைவியிருப்பதாகவும் ,வேண்டுமானால் அவளை அனுபவித்துட்டு போ என்று கூறியுள்ளார் .
உடனே அதை கேட்டு சந்தோஷமடைந்த அந்த கடன்கொடுத்த பெரியவர், அவரின் முன்னாடியே அந்த 10000 கடனுக்கு அவரின் மனைவியை பலாத்காரம் செய்து விட்டு போய் விட்டார் .இதனால் பாதிக்கப்பட்ட அந்த மனைவி அங்குள்ள காவல் நிலையத்தில் உடனே சென்று தன்னுடைய கணவர் மீதும் ,அந்த பலாத்காரம் செய்த நபர் மீதும் புகாரளித்தார் .புகாரினை பெற்ற போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர் .

“பணத்துக்கு பதிலா பலாத்காரம் பண்ணிக்கோ” -பத்தாயிரம் ரூபாய் கடனுக்கு கட்டிய மனைவியை விற்ற நபர்