சென்னையில் இன்று ஒரே நாளில் 24 பேர் கொரோனாவால் மரணம்!

 

சென்னையில் இன்று ஒரே நாளில் 24 பேர் கொரோனாவால் மரணம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் பெருமளவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தும், பாதிப்பு குறைந்ததாக இல்லை. இதனிடையே கொரோனாவால் போடப்பட்டிருந்த ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டதால் தான் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்ததாக சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக முதியவர்கள் தான் கொரோனாவால் அதிகமாக உயிரிழப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், இளம் வயதினர்களும் உயிரிழப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 24 பேர் கொரோனாவால் மரணம்!

இந்நிலையில் இன்று ஒரே நாளில் சென்னையில் 24 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 7 பேரும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 5 பேரும் ஸ்டான்லி மருத்துவமனையில் 4 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது சென்னையில் தான் அதிக அளவு உயிரிழப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.