சென்னையில் 24 கட்டுபாட்டு பகுதிகள் தான் இருக்கின்றன : மாநகராட்சி தகவல்

 

சென்னையில் 24 கட்டுபாட்டு பகுதிகள் தான் இருக்கின்றன : மாநகராட்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை தடுக்க அரசும் மாவட்ட நிர்வாகங்களும் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்து கொண்டிருப்பினும் பாதிப்பு குறைந்ததாக இல்லை. குறிப்பாக சென்னையில் தான் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. மக்கள் தொகை அதிகமாக இருப்பதாலும் கோயம்பேடு சந்தையில் கூட்டம் குவிந்ததாலும் கொரோனா அதிகளவில் பரவியதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது சென்னையில் பாதிப்பு குறைந்து வருகிறது. மொத்தமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், 12 ஆயிரம் பேருக்கு மட்டுமே தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே போல சுமார் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டனர்.

சென்னையில் 24 கட்டுபாட்டு பகுதிகள் தான் இருக்கின்றன : மாநகராட்சி தகவல்

இந்த நிலையில் சென்னையில் 24 கட்டுப்பாட்டு பகுதிகள் மட்டுமே இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அண்ணா நகர் மண்டலத்தில் 11 பகுதிகளும் கோடம்பாக்கம் மற்றும் அம்பத்தூரில் தலா 5 பகுதிகள் இருப்பதாகவும் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் கட்டுப்பாட்டு பகுதிகளும் குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.