24 வருடத்திற்கு பிறகு மணிரத்னத்துடன் இணையும் பிரபலம்! ஆச்சர்யத்தில் சினிமாவுலகம்!

 

24 வருடத்திற்கு பிறகு மணிரத்னத்துடன் இணையும் பிரபலம்! ஆச்சர்யத்தில் சினிமாவுலகம்!

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். மீ டூ சர்ச்சையில் சிக்கிய பின்னர் நீ…ண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். டிசம்பர் மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில்,

அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையை திரைப்படமாக இயக்குவதற்கு அரை நூற்றாண்டுகளாகவே திரையுலகின் பல ஜாம்பவான்கள் முயற்சி செய்து, ஒதுங்கிக் கொண்டார்கள். இந்நிலையில், தனது கனவு படமாக கருதி இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து பிரமாண்டமாக  எடுக்க உள்ளார். இந்த படத்திற்காக இதுவரையில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப் பச்சன் மற்றும் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் என பல முன்னணி நட்சத்திரங்களை தேர்வு செய்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியானது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். மீ டூ சர்ச்சையில் சிக்கிய பின்னர் நீ…ண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். டிசம்பர் மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது இப்படதிற்கு கலை இயக்குனராக தோட்டாதரணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் கோடம்பாக்கத்தில் ஆச்சர்யத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

Thottadharani

பொன்னியின் செல்வன், சோழர் காலத்தில் நடப்பது போல கதைக்களம் உள்ளதால், இப்படத்திற்கு பிரம்மாண்ட செட்கள் போட வேண்டியிருக்கும். ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கான வாசகர்களால் படித்து கொண்டாடப்பட்ட பொன்னியின் செல்வன் கதையை, அவர்களின் கண் முன்னால் கொண்டு வருவதற்காக இந்த பணியை அனுபவம் வாய்ந்த ஒருவரிடம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தோட்டாதரணியைத் தேர்வு செய்திருக்கிறார் மணிரத்னம். 

இதற்கு முன்னர் மணிரத்னம் இயக்கிய நாயகன், தளபதி, பம்பாய் ஆகிய படங்களுக்கு பிறகு 24 ஆண்டுகள் கழித்து தோட்டா தரணி மீண்டும் மணிரத்னத்துடன் இணைகிறார்.