காணாமல் போன வேட்பாளர் மயங்கிய நிலையில் மீட்பு

 

காணாமல் போன வேட்பாளர் மயங்கிய நிலையில் மீட்பு

காணாமல் போன ஏனாம்தொகுதி சுயேட்சை வேட்பாளர், காக்கிநாடாவில் சாலையோரம் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

காணாமல் போன வேட்பாளர் மயங்கிய நிலையில் மீட்பு

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் நடுவே உள்ள பகுதியான ஏனாம், புதுச்சேரி மாநிலத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியாகும். சட்டமன்ற தேர்தலில் ஏனாம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கியிருந்தார் துர்க்கா பிரசாத் பெம்மாடி.

தீவிர பிரச்சாரத்தில் இருந்து வந்த இவர், ஏப்ரல் 1ம்தேதி முதல் காணவில்லை என்றூ அவரது மனைவி சாந்தி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், காக்கிநாடா பகுதியில் அச்சம்பேட்டையில் கோதாவரி ஆற்றங்கரை ஓரமாக மயங்கிய நிலையில் கிடந்த அவர் மீட்கப்பட்டுள்ளார். அதே பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரை யாரேனும் கடத்திச்சென்று அடித்து துன்புறுத்தி ஆற்றங்கரையில் போட்டுவிட்டு சென்றார்களா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.