ஸ்மார்ட்போன் தயாரிப்பு,விற்பனை நிறுத்தம் – எல்.ஜி. அறிவிப்பு

 

ஸ்மார்ட்போன் தயாரிப்பு,விற்பனை நிறுத்தம் – எல்.ஜி. அறிவிப்பு

எல்.ஜி. நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் சேவையை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது.

ஸ்மார்ட்போன் தயாரிப்பு,விற்பனை நிறுத்தம் – எல்.ஜி. அறிவிப்பு

ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இருந்து வெளியேறியதாக எல்.ஜி. நிறுவனம் அறிவித்துள்ளது. நஷ்டத்துடன் இயங்கி வந்த நிலையில் ஜூலை 31-ஆம் தேதியுடன் ஸ்மார்ட்போன் விற்பனையில் இருந்து வெளியேறுகிறது.

எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் எல்.ஜி. நிறுவனம் அறிவித்துள்ளது.

தென்கொரியாவை சேர்ந்த நிறுவனமான எல்.ஜி எலக்ட்ரானிக்ஸ், ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்தது . புதிது புதிதாக ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி வந்த நிலையில் தற்போது அந்த நிறுவனம் ஸ்மார்ட் போன் விற்பனையை விட்டு வெளியேறப் போவதாக அறிவித்திருக்கிறது. எல்ஜி நிறுவனத்தின் மொபைல் பிரிவை வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில் எல்ஜி நிறுவனம் இந்த முடிவை அறிவித்திருக்கிறது.

ஸ்மார்ட்போன் தயாரிப்பு,விற்பனை நிறுத்தம் – எல்.ஜி. அறிவிப்பு

ஸ்மார்ட்போன் சந்தையில் தற்போது இருக்கும் கடும் போட்டி காரணமாக எல்ஜி நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும், அதனால் அந்த நிறுவனத்தின் மொபைல் உற்பத்தி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

ஸ்மார்ட் போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இருந்து எல்ஜி நிறுவனம் வெளியேறுவதால் பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று தெரிவித்திருக்கிறது எல்.ஜி. ஸ்மார்ட் போன் மொபைல் பிரிவில் பணியாற்றிய அவர்களை தங்களின் மற்ற பிரிவுக்கு மாற்றி வருகிறது எல்ஜி நிறுவனம்.