என் கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை.. குரல் உடைந்து பேசும் அமைச்சர் விஜயபாஸ்கர்

 

என் கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை.. குரல் உடைந்து பேசும் அமைச்சர் விஜயபாஸ்கர்

விராலிமலை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தொகுதி மக்களூக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்து ஒரு வீடியோவினை வெளியிட்டிருக்கிறார். குரல் உடைந்து பேசும் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

என் கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை.. குரல் உடைந்து பேசும் அமைச்சர் விஜயபாஸ்கர்

அந்த வீடியோவில், ‘’வணக்கங்க. நான் உங்க விஜயபாஸ்கர் பேசுறங்க.. ஏப்ரல்-6.. நீங்கள் வாக்களிக்க வேண்டிய, எனக்கு வாய்ப்பளிக்க வேண்டிய நல்ல நாள். இந்த விராலிமலை பூமிதாங்க நான் கும்பிடுற சாமி. விராலிமலை மக்கள்தான் என்னோட உறவு. உங்களுக்கு உழைக்கிறதுக்காக மட்டும்தான் இந்த உசிரு. மெழுகுவர்த்தியாக உங்களுக்காக உருகி உருகி நான் உழைச்சிக்கிட்டு இருக்கேங்க.

கஜா, கொரோனா மட்டும் இலங்க. இனி எந்த கஷ்டமும் உங்களுக்கு வர விடாம, ஒரு பாதுகாப்பு அரணாக நான் உங்களோடு எப்பவும் இருப்பேன். இப்ப மட்டும் இல்ல.. நான் எப்பவோ என் வாழ்க்கையை உங்களுக்காக அர்ப்பணிச்சுட்டேன். இப்ப சொல்றேங்க.. என் கடைசி சொட்டு ரத்தம் இருக்கிற வரைக்கும் என் வாழ்க்கைங்கிறது உங்களுக்காகத்தான். நான் இந்த மண்ணை நம்புறேன். மக்களை நம்புறேன். மக்களோட மனசை நம்புறேன். இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு உங்கள் பாத மலர்களை தொட்டு வணங்கி கேட்டுக்கொள்கிறேன்.’’என்று பேசியிருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.