கோவை என்றால் வேலுமணியே துணை…நடிகர் வையாபுரி பிரச்சாரம்

 

கோவை என்றால் வேலுமணியே துணை…நடிகர் வையாபுரி பிரச்சாரம்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட காந்தி பார்க்கில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் உள்ளாட்சி துறை அமைச்சருமான தொண்டாமுத்தூர் சட்டமன்ற வேட்பாளர் எஸ். பி. வேலுமணிக்கு ஆதரவாக நடிகர் வையாபுரி பிரச்சாரம் செய்தார்.

கோவை என்றால் வேலுமணியே துணை…நடிகர் வையாபுரி பிரச்சாரம்

பிரச்சாரத்தில் அவர் பேசியபோது, ’’மதுரையில் மீனாட்சி, காஞ்சியில் காமாட்சி, காசி விசாலாட்சி, தமிழ்நாட்டில் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே அம்மாவின் ஆட்சி. அதற்கு இங்கு கூடியுள்ள மக்களே சாட்சி.’’என்றவர் மேலும், ’’சொல்வதை நிறைவேற்றுபவர் முதலமைச்சர் எடப்பாடியார். அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்.

இதுவரையிலும் எந்த அரசும் செய்யாத வகையில் விவசாயிகளுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. கோவையின் கதாநாயகன் தொண்டாமுத்தூரில் தொண்டர்களின் முத்து. கோவையின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை பெற்று செயல்படுத்தியவர் அமைச்சர் எஸ். பி. வேலுமணி.

50 ஆண்டு கால வளர்ச்சியை ஐந்தே ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் செயல்படுத்தியவர். கொரோனா காலத்தின் போதும் சரி வெள்ள நிவாரணப் பணிகளிலும் சரி உங்கள் வீட்டுப் பிள்ளையாக ஓடி வந்து உதவிய நல்ல உள்ளம் கொண்டவர் எஸ். பி. வேலுமணி. அதுமட்டுமல்ல உள்ளாட்சித் துறையில் சிறப்பான சேவைக்காக மத்திய அரசின் 148 விருதுகளைப் பெற்றிருப்பவர்.

முருகன் வேலும் மயிலும் துணை. கோயம்புத்தூர் என்றால் வேலுமணியே துணை. மக்கள் விரும்பும் இந்த நல்லாட்சி தொடர்ந்து நடைபெற திட்டங்கள் தொகுதியில் நடைபெற சரித்திர வெற்றி பெறும் வகையில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன்’’என்று கேட்டுக்கொண்டார்.