மோடி முன்பு டி.ஆர். ஸ்டைலில் கலக்கிய ஓபிஎஸ்

 

மோடி முன்பு டி.ஆர். ஸ்டைலில் கலக்கிய ஓபிஎஸ்

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் மதுரை அம்மா திடலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று பேசியபோது, ‘’இந்த சட்டமன்ற தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறுகிற தேர்தல்’’என்றார்.

மோடி முன்பு டி.ஆர். ஸ்டைலில் கலக்கிய ஓபிஎஸ்

மேலும் இதுகுறித்து, ‘’மக்கள் சக்திக்கும் தீய சக்திக்கும் நடைபெறும் தேர்தல், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய கட்சிக்கும் தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்ட கட்சிக்கும் நடக்கும் தேர்தல், ஒளிமயமான தமிழகத்தை அதிமுக உருவாக்கியது இருள் மயமான தமிழகத்தை திமுக உருவாக்கியது. அராஜக திமுக வேண்டாம் என்பதை உறுதி செய்கிற தேர்தல் இந்த தேர்தலாகும்’’என்று டி.ஆர். ஸ்டைலில் கலக்கினார்.

’’குடிமராத்து உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை அதிமுக தந்தது. ஆனால் நில அபகரிப்பு போன்ற தமிழகத்திற்கு செய்த துரோகத்தின் பலனாக பத்தாண்டுகளாக திமுகவினர் வனவாசத்தை அனுபவித்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியை எப்போது மக்கள் கைகழுவி விட்டார்கள்.

மோடி முன்பு டி.ஆர். ஸ்டைலில் கலக்கிய ஓபிஎஸ்

பிரதமர் நரேந்திர மோடி, முன்னோடித் திட்டத்தின் மூலம் வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்திய தேசத்தை உருவாக்கி வருகிறார். மேலும் தமிழகத்திற்கு கோடிக்கணக்கில் திட்டங்களை அறிவித்துள்ளார். பதினோரு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி தந்துள்ளார். அதேபோல் மதுரையில் ஆயிரத்து 500 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உறுதுணையாக இருந்துள்ளார்.

பத்தாண்டுகளில் தொலைநோக்கு திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே முதல் இடமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் திமுகவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் அம்மா அரசு மீண்டும் அமைந்திட வேண்டும். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வெற்றி சின்னமான இரட்டை இலைக்கும் பாரத பிரதமரின் ஆசி பெற்ற வெற்றி சின்னம் தாமரைக்கும் பாமகவின் வெற்றிச் சின்னமாம் பலத்திற்கும் தாமாக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.