கூகுள் பே, பேடிஎம் மூலம் பணப் பட்டுவாடா நடக்குதா?

 

கூகுள் பே, பேடிஎம் மூலம் பணப் பட்டுவாடா நடக்குதா?

கூகுள் பே, போன் பே, பேடிஎம் மூலம் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்கிறது அதிமுக என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி எழுதிய புகார் மனுவினை, திமுக வழக்கறிஞர்கள் ஆர். நீலகண்டன் மற்றும் ஜே. பச்சையப்பன் ஆகியோர், தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரை நேரில் சந்தித்து கொடுத்தனர்.

கூகுள் பே, பேடிஎம் மூலம் பணப் பட்டுவாடா நடக்குதா?

அந்த புகார் மனுவில், தமிழகமெங்கும் பல்வேறு தொகுதிகளில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வாக்காளர் வீட்டிற்கும் சென்று அவர்களது வாக்காளர் அட்டை நகல்களையும், அவர்களின் செல்போன் எண்களையும் பெற்று வருகிறார்கள். குறிப்பாக ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் அதிகமாக இது நடந்து வருகிறது. இதன் மூலம் வாக்காளர்களுக்கு கூகுள் போன் பே பேடிஎம் ஆன்லைன் மூலமாக பணம் பட்டுவாடா செய்கிறது.

கூகுள் பே, பேடிஎம் மூலம் பணப் பட்டுவாடா நடக்குதா?

தொகுதிக்கு வெளியே வாக்காளர்களை அழைத்து வந்தும் வந்து அவர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ய அதிமுக முயற்சி செய்து வருகிறது. இது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை மற்றும் சோதனை சாவடிகளில் ஒருவரிடம் இருந்து பணத்தை கைப்பற்றுவதற்காக மட்டுமே சோதனை நடத்துவதோடு அல்லாமல் அவர்களிடம் வாக்காளர் அட்டை தகவல்கள் செல்பேசி எண் தகவல்கள் இருந்தால் அதனையும் கைப்பற்ற வேண்டும் என்றும் திமுக தேர்தல் அதிகாரியிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருக்கிறது.

இந்த புகார் மீது உடனடியாக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையரை வலியுறுத்தி இருக்கிறது.