அண்ணாமலைன்னு பேருவச்சிக்கிட்டா ரஜினின்னு நினைப்பு..நக்கலடித்த கனிமொழி

 

அண்ணாமலைன்னு பேருவச்சிக்கிட்டா ரஜினின்னு நினைப்பு..நக்கலடித்த கனிமொழி

கடந்த முறை அரவக்குறிச்சியில் போட்டியிட்டு வென்ற செந்தில்பாலாஜி இந்த முறை கரூர் தொகுதிக்கு மாறிப்போனார் என்ற கேள்வி இருந்தது. அண்ணாமலையின் பேச்சைக்கேட்ட பின்னர்தான் செந்தில்பாலாஜி தொகுதி மாறிய பின்னணி தெரியவருகிறது. அண்ணாமலை போட்டியிடுகிறார் என்று தெரிந்துதான் செந்தில்பாலாஜி தொகுதி மாறிவிட்டார் போலிருக்கிறது.

அண்ணாமலைன்னு பேருவச்சிக்கிட்டா ரஜினின்னு நினைப்பு..நக்கலடித்த கனிமொழி

இந்த நிலையில், இரவு போடி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., “அரவக்குறிச்சியில் போட்டியிடும் பாஜக கேண்டிடேட் அண்ணாமலைன்னு ஒருத்தர் இருக்காரு. அண்ணாமலைன்னு பேருவெச்சிக்கிட்டா ரஜினின்னு நினைப்பு. நாமெல்லாம் பாட்ஷாவ பார்த்து வளர்ந்தவங்க. ஆனா, அவரு சொல்றாரு…செந்தில் பாலாஜியை தூக்கிப்போட்டு அடிச்சுடுவேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அத காட்ட வெச்சிடாதீங்கன்னு…’’என்று அண்ணாமலையை நக்கலடித்தவர்,

’’நீ தொட்டுப்பாரு தம்பி. நாங்க எழுந்து நின்னோம்னா… தாங்கமாட்டீங்க’’என்று மிரட்டலும் விடுத்தார்.

கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியும், ‘’ஆரம்பம் முதலே வன்முறையை தூண்டும் விதத்திலேயே அண்ணாமலையின் பேச்சு இருக்கிறது. ஆனால் தொடர்ந்து நாங்கள் அமைதி காத்து வருகிறோம். அரவக்குறிச்சி தொகுதி மக்கள் அமைதியும், கண்ணியமும் மிகுந்தவர்கள். இந்த ரௌடித்தனத்தை அனுமதிக்க மாட்டார்கள். தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அரவக்குறிச்சி தொகுதியில் இதுவரை இப்படி ஒரு அநாகரிக, ரௌடி அரசியல் நடந்ததில்லை’’என்று அண்ணாமலையின் பேச்சுக்கு எதிராக கொந்தளிக்கிறார்.