அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு…அர்ஜுனமூர்த்தி

 

அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு…அர்ஜுனமூர்த்தி

தமிழக பாஜகவின் அறிவுசார்பிரிவின் தலைவராக இருந்த அர்ஜூனமூர்த்தி, ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்தார். ரஜினி கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்ததும், ‘இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி’ஐ தொடங்கினார். கட்சிக்காக எந்திரன் சின்னத்தையும் அவசரமாக பெற்றார். தேர்தல் நெருக்கத்தில் அவசர அவசரமாக கட்சி தொடங்கியவர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை. தேர்தலில் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி போட்யிடவில்லை என்று அறிவித்துவிட்டார். போட்டியிட வில்லை என்கிறபோது இத்தனை அவசரமாக ஏன் கட்சி தொடங்க வேண்டும் என்ற பேச்சு எழுந்தது.

அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு…அர்ஜுனமூர்த்தி

இந்நிலையில், இந்திய சினிமாவில் அளித்த பங்களிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்தார். அமிதாபச்சன் ,வினோத் கண்ணா, லதா மங்கேஷ்கர் ,கன்னட நடிகர் ராஜ்குமார் உள்ளிட்டோருக்கும் இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அர்ஜூனமூர்த்தி, ‘’அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கிய மத்திய அரசுக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்’’என்று தெரிவித்துள்ளார்.