ராசாவும் ஸ்டாலினும் காலடி எடுத்து வைத்தால்.. அதிமுக வேட்பாளரின் ஆவேசம்

 

ராசாவும் ஸ்டாலினும் காலடி எடுத்து வைத்தால்.. அதிமுக வேட்பாளரின் ஆவேசம்

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து புதுவை கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்தின்போது பேசிய புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், ‘’திமுகவை சேர்ந்த ராசா தமிழக முதல்வரின் தாயாரை தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார் அவர் மட்டுமல்ல திமுக தலைவர் ஸ்டாலின் புதுச்சேரியின் உள்ளே காலடி எடுத்து வைக்க முடியாது ராசா இன்று காலடி எடுத்து வைத்தாலும் அவருக்கு தகுந்த பதிலடியை கொடுக்கும் புதுச்சேரி அதிமுக வெட்கமில்லாமல் பேசிவிட்டு ராசா மன்னிப்பு கேட்கிறார் நானும் கூட திமுக தலைவரை தரக்குறைவாக பேச எவ்வளவு நேரம் ஆகிவிடும் திமுக ஒரு தகுதியற்ற இயக்கம்’’ என்றார்.

ராசாவும் ஸ்டாலினும் காலடி எடுத்து வைத்தால்.. அதிமுக வேட்பாளரின் ஆவேசம்

அவர் மேலும், ’’இந்த தேர்தல் புதுச்சேரியில் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும் தேர்தல். இது யூனியன் பிரதேசம். இங்கு மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கக்கூடிய அரசு வந்தால் மட்டுமே மாநில வளர்ச்சி மேம்படுத்தப்படும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் மற்றும் உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் தங்குதடையின்றி யும் செயல்படுத்தப்படும்’’ என்றார்.

புதுவையில் நேற்று முன் தினம் நடந்த பிரதமர் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசியபோதும், ஸ்டாலின் -ராசாவுக்கு இதே எச்சரிக்கையினை விடுத்தார் அன்பழகன்.