மந்திரவாதிகளை வரவழைத்து மிரட்டும் திமுக வேட்பாளர்

 

மந்திரவாதிகளை வரவழைத்து மிரட்டும் திமுக வேட்பாளர்

கடலூர் தொகுதியின் திமுக வேட்பாளர் கோ.ஐயப்பன். முன்னாள் எம்.எல்.ஏவான இவர், தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால், பில்லி, சூனியம், ஏவல் என்று வாக்காளர்களை மிரட்டி வருவதுதான் அத்தொகுதியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

மந்திரவாதிகளை வரவழைத்து மிரட்டும் திமுக வேட்பாளர்

‘’யாராவது பணமோ, பொருளோ கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். அதற்காக அவர்களுக்கு ஓட்டு போடலாம் என்று நினைக்காதீர்கள். கேரளாவில் இருந்து மந்திரவாதிகளை வரவழைத்து இருக்கிறோம். திமுகவுக்கு ஓட்டு போடாதவர்களை அவர்கள் தண்டித்துவிடுவார்கள். முதலில் எல்லோருக்கும் வயிறு வலிக்கும். கடைசி வரைக்கும் நீங்கள் மீள முடியாதபடி பில்லி, சூனியம் வைத்து விடுவார்கள்’’என்று பிரச்சாரத்தில் கோ.ஐயப்பன் எச்சரித்து வருகிறார்.

மந்திரவாதிகளை வரவழைத்து மிரட்டும் திமுக வேட்பாளர்

இதனால் அத்தொகுதி மக்கள் அவர் மீது அதிருப்தியில் இருக்கின்றனர்.