தம்பி இறந்த செய்தி கேட்டதும் சுருண்டு விழுந்து அண்ணன் மரணம்

 

தம்பி இறந்த செய்தி கேட்டதும் சுருண்டு விழுந்து அண்ணன் மரணம்

அண்ணனை தம்பி வெட்டிக்கொலை, தம்பி்யை அண்ணன் குத்திக்கொலை என்ற செய்திகளாக வந்துகொண்டிருக்கும் சூழலில் தம்பி இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் சுருண்டு விழுந்து அண்ணன் மரணம் அடைந்த செய்தி துக்கம் என்றாலும் பாசம் என்ற கோணத்தில் நெகிழவைக்கிறது.

தம்பி இறந்த செய்தி கேட்டதும் சுருண்டு விழுந்து அண்ணன் மரணம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பாரதிநகரை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன்(41). டிரைவரான இவர் சொந்தமாக கார் வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். அண்மையில் இன்னோவா கார் ஒன்றையும் வங்கி கடனில் வாங்கி இருக்கிறார். கொரோனா காலத்தினால் வருமானம் குறைந்ததால் வங்கி கடனை கட்ட முடியாமல் திணறியிருக்கிறார் ஸ்ரீகண்டன். வங்கியின் நெருக்கடியினால் மன உளைச்சலில் இருந்தவர், அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டார். மனைவி குழந்தைகள் கதவை தட்டியும் திறக்கவில்லை. அருகருகேதான் சகோதர்களின் வீடு என்பதால் ஸ்ரீகண்டனின் மனைவி சந்தியா ஓடிச்சென்றூ அவர்களூக்கு தகவல் தர, சகோதர்கள் பிரபாகரனும் மணிகண்டனும் கதவை உடைத்துக்கொண்டு சென்றூ பார்த்தபோது ஸ்ரீகண்டன் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்துள்ளார்.

தம்பி இறந்த செய்தி கேட்டதும் சுருண்டு விழுந்து அண்ணன் மரணம்

அவரை மீட்டு தக்கலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோசித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டதும் கதறி அழுத மணிகண்டன் சுருண்டு விழுந்தார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது மணிகண்டன் உயிரிழந்திருந்தார்.

சகோதரர்களின் அடுத்தடுத்த மரணம் தக்கலையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.