’’எங்களை விட்டுடுங்க..’’-கையெடுத்து கும்பிட்ட நமீதா கணவர்!

 

’’எங்களை விட்டுடுங்க..’’-கையெடுத்து கும்பிட்ட நமீதா கணவர்!

அதிமுகவில் இருந்த நடிகை நமீதா பாஜகவில் இணைந்தது முதல் அக்கட்சிக்கு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டும் அதிமுக, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.

’’எங்களை விட்டுடுங்க..’’-கையெடுத்து கும்பிட்ட நமீதா கணவர்!

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் டி.குப்புராமுக்கு வாக்கு சேகரிக்க தனது கணவர் வீரேந்திர சவுத்ரியுடன் சென்றார் நமீதா.

’’எங்களை விட்டுடுங்க..’’-கையெடுத்து கும்பிட்ட நமீதா கணவர்!

ராமேஸ்வரம் பகுதியில் நான்கு இடங்களில் நமீதா பிரச்சாரம் செய்ய திட்டமிட்டப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கு மருதுபாண்டியர் சிலை அருகே பிரச்சாரத்திற்கு ஓட்டலில் இருந்து புறப்பட்டு சென்றார் நமீதா. அங்கே வேட்பாளர் குப்புராம் வராததால் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு திரும்பிவிட்டார். அடுத்து தேவர் சிலை அருகேயும், பத்திரப்பதிவு அலுவலகம் அருகேயும் பிரச்சாரம் செய்ய சென்றபோது குப்புராம் வராததால் வேறு வழியின்றி மோடி செய்த சாதனைகளை மட்டும் பட்டியலிட்டுவிட்டு திரும்பினார். அடுத்த இறுதியாக ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் செய்ய சென்றபோதும் குப்புராம் வராததால் கடுப்பான நமீதா பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு ஓட்டலுக்கு சென்றுவிட்டார்.

’’எங்களை விட்டுடுங்க..’’-கையெடுத்து கும்பிட்ட நமீதா கணவர்!

பின்னாலேயே சென்ற பாஜகவினர், ராமேஸ்வரம்தான் இப்படி ஆகிவிட்டது. ராமநாதபுரம் பகுதி்யில் பிரச்சாரம் செய்ய வாருங்கள் என்றூ அழைக்கவும், சடாரென்று எழுந்த நமீதாவின் கணவர், கையெடுத்து கும்பிடுகிறேன். தயவு செய்து வேட்பாளர் இல்லாமல் எங்களை பிரச்சாரத்திற்கு அழைக்காதீர்கள். எங்களை விட்டுடுங்க.. நாங்க சென்னைக்கே போயிடுறோம்’’ என்று சொல்லிவிட்டார் உறுதியாக.