புரடியூசரை வெட்டி தலையுடன் செல்வேன்..காமெடி நடிகருக்கு வந்த ஆத்திரம்

 

புரடியூசரை வெட்டி தலையுடன் செல்வேன்..காமெடி நடிகருக்கு வந்த ஆத்திரம்

தண்டாயுதபாணி, நாயகன்(2008), பில்லா பாண்டி ஆகிய படங்களின் இயக்குநர் சரவண சக்தி, குட்டுப்புலி, தர்மதுரை, கொடிவீரன், ஈஸ்வரன், மாமனிதன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் காமெடி மற்றும் குணச்சிச்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் மீது தயாரிப்பாளர் சிங்காரவேலன், கொலை மிரட்டல் புகார் விடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

புரடியூசரை வெட்டி தலையுடன் செல்வேன்..காமெடி நடிகருக்கு வந்த ஆத்திரம்

அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு கதையை சொல்லி அதற்கு திரைக்கதை எழுதி வரச்சொல்லி, 50 ஆயிரம் பணமும் கொடுத்ததாக சொல்லி இருக்கிறார் தயாரிப்பாளர் சிங்காரவேலன். நிர்மால தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனிடம் இதற்காக அனுமதியும் பெற்றிருக்கிறேன். ஆனால் அந்த கதையை வேறொருவரிடம் விற்றுவிட்டார் சரவண சக்தி என்று நொந்துகொள்கிறார் சிங்காரவேலன். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், 27.3.2021 அன்று சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு மதுபோதையில் அடியாட்களூடன் வந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார் சரவண சக்தி என்று தெரிவித்துள்ளார் சிங்காரவேலன்.

புரடியூசரை வெட்டி தலையுடன் செல்வேன்..காமெடி நடிகருக்கு வந்த ஆத்திரம்

அன்றைக்கு தான் அலுவலகத்தில் இல்லாததால் அலுவலகம் வந்ததும் தன்னை கொலை செய்து தலையை வெட்டி எடுத்து செல்வதாக சரவண சக்தியும் அவருடன் வந்தவர்களும் அலுவலகத்தில் காத்திருந்தார்கள். போலீஸ் வந்ததும் ஓடிவிட்டார்கள். இன்று காலையில் போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராகிறார் சரவண சக்தி. அவருக்கு தக்க தண்டனை கிடைக்கும். என் பக்கம்தான் நியாயம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் சிங்காரவேலன்.

போலீஸ் விசாரணைக்கு பின்னரே சரவண சக்தி தரப்பில் என்ன நடந்தது என்பது தெரியவரும்.

கொலை செய்யும் அளவுக்கு ஒரு காமெடி நடிகர் போயிருப்பது கோடம்ப்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.